தினம் தினம் வரும்
நாள்போல் இல்லாமல்,
இனிவரும் நாளெல்லம்
இன்பமாய் இருக்கட்டும்.
திக்கி திக்கி பேசும்
குழந்தை மொழிபோல,
தித்திப்பாய் இருக்கட்டும்
திகட்டாமல் இருக்கட்டும்.
சீரியல் பார்த்து பார்த்து
அழுதுசிவந்த முகம்,
இன்று ஒருநாளாவது சிரிக்கட்டும்
சகலரும்,
சண்டை, சச்சரவு களைந்து,
மதங்களையெல்லம் மறந்து,
மனித உணர்வோடு
மகிழ்வாய் இருக்கட்டும்.
தரணி வாழ் அனைவரும்
என் தமிழ்ப் புத்தாண்டையும்
இதுபோல் கொண்டாடும்
நாள்வரட்டும்.
எதிர்காலம் அது உங்கள்
எண்ணம்போல் அமைய எனது
Home � �
Posted by திபர்சன் on 5:46 AM //